வெள்ளி, 7 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 201 - ஐப்பசி - விசுவாவசு வெள்ளி / 07 - November - 2025 - Friday

    இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த இணையப்பக்கத்தில் ஜெயமாேகனின் யார் தற்குறிகள் என்ற காணாளியில் அவரது பார்வையை ஒத்தே எனது பார்வையுமிருந்தது.  பள்ளிப் படிப்பைத்தாண்டிய புத்தக வாசிப்பென்பது தமிழ்ச்சமுதாயத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவதேயில்லை.  இதில் எனது சுற்றத்தின் அனுபவத்தை வைத்து அவரது ஆதங்கத்தைப்புரிந்து காெள்ள முடிந்தது.  பக்கத்திலிருக்கும் மாநிலங்களை ஒப்பிடும்பாெழுது தமிழ்ச்சமுதாயத்தின் இலக்கிய வாசிப்பென்பது மிகவும் குறைவேயென்பதை ஒத்துக்காெள்ள மனம் மறுத்தாலும் அதுவே உண்மை.  

    மேற்கத்திய நாடுகளின் சிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து அதற்கான மதிப்பாய்வை அடுத்த நாளே அவரிடம் சொன்னார்களென்ற தகவல் என்னை உண்மையில் வியக்க வைத்தது.  நானும் அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்காெள்ள வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டதென்பதும், இத்தகவலை எனது துணைவிக்கும் கடத்தியதாேடு நின்றிடாமல்  தற்குறிகள் யாரென்ற இந்த அரைமணிக் காணாெளியைக் காண பணித்தேன்.  மிகவும் கடினத்தாேடே  இதனைக்கண்டு முடித்தாளவளும். பள்ளிப்படிப்பைக் காட்டிலும் வாசிப்புப் பழக்கமே எனது எதிர்காலக் கனவையும், அடுத்தவர்களுடன் பேசும் கலையையும், வாழ்க்கைச் சமாளிப்பின் அணுகுமுறையையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கெடுத்ததாக உணருவதால் என் குழந்தைகளையும் வாசிப்புப்பழக்கத்தைத் தூண்ட என் துணைவியை வற்புறுத்தினேன்.  

புதன், 5 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 20 - ஐப்பசி - விசுவாவசு வியாழன் / 06 - November - 2025 - Thursday

 ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல் படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித் தொகையாகவோ அல்ல. அழகியல் ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன.

இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை  [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கிய விமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கருத்து.

https://www.jeyamohan.in/118283/ - லிருந்து...


செவ்வாய், 4 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 19 - ஐப்பசி - விசுவாவசு புதன் / 05 - November - 2025 - Wednesday

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும். 

ஒன்றுதன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்குஅதையே நான் தன்னறம் என்கிறேன்நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல்அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றனஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும். 

இரண்டுநம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள்ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம்அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டுஅவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது. 

எவரும் எந்த உறவிலும்அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாதுஎவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது. அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை. அது ஆன்மாவை அழிக்கும் செயல். எவரும் தன் அறிவார்ந்த மலர்ச்சிஆன்மிக முன்னகர்வு ஆகியவற்றை எந்நிலையிலும் விட்டுவிடக்கூடாதுபெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ, கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ.

ஆனால் அடிப்படைக் கடமைகளைச் செய்தாகவேண்டும்அதாவது, அடிப்படையானவற்றை மட்டும். அவற்றைச் செய்வது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. கடமை என்பது தார்மீகப் பொறுப்பு. எந்த பொறுப்பும் சுமை. எந்தச் சுமையும் வாழ்க்கை முழுமைக்குமானது அல்ல. எந்த பொறுப்பும் அதில் இருந்து எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வெளியேறும்பொருட்டே செய்யப்படவேண்டும்.

ஆக, மேலே சொன்ன  இரண்டு அம்சங்களின் சமரசமாகவே நம் முடிவுகள் அமையவேண்டும். ஒன்று நம் தன்னறம், இன்னொன்று, நம் சூழல்அப்படித்தான் நீங்கள் உங்கள் மணம் பற்றிய முடிவை நீங்கள் எடுக்கவேண்டும்.

- சாதிமறுப்புக்காக ஒரு திருமணம்! - 
https://www.jeyamohan.in/222560/ - லிருந்து...