இடுகைகள்

வாசித்ததில் நேசித்தது... 201 - ஐப்பசி - விசுவாவசு வெள்ளி / 07 - November - 2025 - Friday

     இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த இணையப்பக்கத்தில் ஜெயமாேகனின் யார் தற்குறிகள் என்ற காணாளியில் அவரது பார்வையை ஒத்தே எனது பார்வையுமிருந்தது.  பள்ளிப் படிப்பைத்தாண்டிய புத்தக வாசிப்பென்பது தமிழ்ச்சமுதாயத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவதேயில்லை.  இதில் எனது சுற்றத்தின் அனுபவத்தை வைத்து அவரது ஆதங்கத்தைப்புரிந்து காெள்ள முடிந்தது.  பக்கத்திலிருக்கும் மாநிலங்களை ஒப்பிடும்பாெழுது தமிழ்ச்சமுதாயத்தின் இலக்கிய வாசிப்பென்பது மிகவும் குறைவேயென்பதை ஒத்துக்காெள்ள மனம் மறுத்தாலும் அதுவே உண்மை.       மேற்கத்திய நாடுகளின் சிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து அதற்கான மதிப்பாய்வை அடுத்த நாளே அவரிடம் சொன்னார்களென்ற தகவல் என்னை உண்மையில் வியக்க வைத்தது.  நானும் அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்காெள்ள வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டதென்பதும், இத்தகவலை எனது துணைவிக்கும் கடத்தியதாேடு நின்றிடாமல்  தற்குறிகள் யாரென்ற இந்த அரைமணிக் காணாெளியைக் காண பணித்தேன்.  மிகவும் கடினத்தாேடே  இதனைக...

வாசித்ததில் நேசித்தது... 20 - ஐப்பசி - விசுவாவசு வியாழன் / 06 - November - 2025 - Thursday

  ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல் படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித் தொகையாகவோ அல்ல. அழகியல் ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை  [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கிய விமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கருத்து. https://www.jeyamohan.in/118283/ -  லிருந்து...

வாசித்ததில் நேசித்தது... 19 - ஐப்பசி - விசுவாவசு புதன் / 05 - November - 2025 - Wednesday

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும் .   ஒன்று ,  தன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்கு .  அதையே நான் தன்னறம் என்கிறேன் .  நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல் ,  அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றன .  ஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும் .   இரண்டு ,  நம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள் .  ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம் .  அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டு .  அவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது .   எவரும் எந்த உறவிலும் ,  அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாது .  எவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது . அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை.  அது ஆன்மாவை அழிக்கும் செயல் . எவரும்  தன் அறிவார்ந்த மலர்ச...

வலைப்பதிவின் முதல்நாள் / 31 ஆனி,செவ்வாய்க்கிழமை / 15 சூலை, 2025 அன்று எழுதியது.

     வலைப்பதிவில் எழுதத் தாெடங்குங்கள் என்று இலக்கியச்சகோதரர் (இரத்தச் சகோதரனாகவே உணரத் தாேன்றுகிறது) அன்றொரு மாலையில் சொல்லிய பாெழுதே என் மூளையிலோ, தலையிலாே ஒரு ஒளி மின்னியது உண்மைதான். ஆனால் பலமுறை நினைத்தும் என்னால் எழுத இயலாமல், அந்த ஒளி குறைந்து ஒரு மாதம் கழிந்ததும் / ஏதோ ஒன்று உந்தித் தள்ளியவுடன், ஒரு வழியாக இதாே எழுதத்தாெடங்கி விட்டேன்.  ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றவுடன் இது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே.     நேற்றைய திங்கட்கிழமை காலை வெகுநேரம் தூங்கியிருந்ததால் எழுந்ததும் மிக்க மகிழ்வுடனே எனக்குரிய நாளை துவங்கியிருந்தேன்.  ஆனாலும் என் வழக்கமான பணியான குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புதலில்லாமல், தினமும் எழுந்தவுடன் அளவளாவும் குழந்தைகளைக் காணாமல் சிறிய மனவருத்தம் காெண்டேன்.  கடந்த மூன்று வருடங்களாக வாரநாட்களில் தினமும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கி வருவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுபட நேற்றிலிருந்து அதிக நேரம் தூங்குவதென எனக்கு நானே உறுதியிட்டு காலையிலிருந்தே எனக்குரிய கடந்தவார விடுபட்ட வேலைகளை சீ...

R & D of Baby Tamil Names - Baby Boy

வெற்றிவேல் செழியன் -  முதலாம் பாண்டிய மன்னர்களிலொருவர். தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் - மதுரை மாங்குளம் கல்வெட்டு (கி.மு. 3ஆம் நுாற்றாண்டு) - தமிழி கல்வெட்டு பாண்டிய மன்னர்களின் பெயர்கள்: 1. முற்காலப்பாண்டியர்கள் :  குமரி நாடு கி.மு. 600, 2600 வருடங்களுக்கு முன்பு வடிம்பலம்ப நின்ற பாண்டியன் (நெடியாேன்) -  பஃறுளி ஆறோடிய நாட்டிலாட்சி, கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த மன்னன்.  புறநானுாற்றுப்பாடலாதாரம். முதுக்குடும்பி பெருவழுதி ( பல்யாகசாலை)   -  ஆயிரம் வேள்விகள் நடத்தியவர், பிற்காலச்செப்பேடுகள் மற்றும்  புறநானுாற்றுப்பாடலாதாரம்.   2. கடைச்சங்க பாண்டியர்கள் - மாறன், வழுதி, செழியன் இந்த மூன்று பெயர்களால் மாறி மாறி அழைக்கப்படுவதுண்டு.  49 மன்னர்கள்.  10 மாமன்னர்கள் பற்றிய குறிப்பு, மற்றவர்களின் பெயர் தெரிந்திருந்தும் வரலாற்றுக்குறிப்புகளேதுமில்லை. பாண்டியன் முடத்திருமாறன் (தென்மதுரையும், கபாடபுரமும் கடற்கோள் கொண்டுவிட்ட பிறகு, மதுரையைத் தலைநகராகக் உருவாக்கிக் காெண்டு ஆட்சி செய்த மன்னர்.  இவர் மதுரையிலாரம்பித்தத...

Tamil's Most Wanted Bookmarks

  தமிழ்ப்பேழை  -  தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம் வாசிப்பை நேசிப்போம்  - முகப்புத்தகக்குழு. திருக்குறள்  :  திருவள்ளுவர் அருளிய திருக்குறள் சொல்வனம்: மின்னிதழ்.   (கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்)  

Today's Read & Listen: My Bookmarks of reading - நான் வாசித்தவை, கேட்டவை.

நெட்டோட்டம்  - Published on January 27, 2024 A Fine Thread- மொழிபெயர்ப்பாளர் குரல் - Listened:  Writer, Translator Jegadeesh Kumar on Translating ‘A Fine Thread & other stories and ‘The Writer Jeyamohan’ பூமர்  - Published on January 28, 2024 பிரஜாபதியா?  - Published on January 29, 2024 ஆயுர்வேத அறிமுக வகுப்புகள், அறிவிப்பு மெய்யான ஆல்ஃபா மேல்…  -  Published on February 06, 2024 கூர்வாசிப்பு இந்து மதம் என ஒன்று உண்டா? தொடங்காமையில் இருத்தல் ஆத்மாவை நிரூபிக்க அரியவழி! மதம் கடந்த ஆன்மிகம் ஆளுமைகள், கதைகள்- கடிதங்கள் 20, மார்ச் நீலக்கடல் வெண்பவளம் 28, மார்ச் பழைய கசப்பு, வளர்ந்த ஒளி மொழிவெளி 30, மார்ச் இருபெருநிலைகள், ஜெயமோகன் பெங்களூரு கட்டண உரை  31, மார்ச் Ajithan Speech - மைத்ரி நாவல் விமர்சன அரங்கு  - பார்த்து கேட்டவை.  மலையாள எழுத்தாளரின் நூல் விளக்கம் மற்றும் அஜிதனின் நன்றியுரையின் முப்பது நிமிடங்கள். What are the top 25 Tamil novel writers? 01, ஏப்ரல் கதைவெளி எதுகையும் மோனையும் Ajithan Speech - மைத்ரி நாவல் விமர்சன அரங்...