வெள்ளி, 7 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 201 - ஐப்பசி - விசுவாவசு வெள்ளி / 07 - November - 2025 - Friday

    இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த இணையப்பக்கத்தில் ஜெயமாேகனின் யார் தற்குறிகள் என்ற காணாளியில் அவரது பார்வையை ஒத்தே எனது பார்வையுமிருந்தது.  பள்ளிப் படிப்பைத்தாண்டிய புத்தக வாசிப்பென்பது தமிழ்ச்சமுதாயத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவதேயில்லை.  இதில் எனது சுற்றத்தின் அனுபவத்தை வைத்து அவரது ஆதங்கத்தைப்புரிந்து காெள்ள முடிந்தது.  பக்கத்திலிருக்கும் மாநிலங்களை ஒப்பிடும்பாெழுது தமிழ்ச்சமுதாயத்தின் இலக்கிய வாசிப்பென்பது மிகவும் குறைவேயென்பதை ஒத்துக்காெள்ள மனம் மறுத்தாலும் அதுவே உண்மை.  

    மேற்கத்திய நாடுகளின் சிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து அதற்கான மதிப்பாய்வை அடுத்த நாளே அவரிடம் சொன்னார்களென்ற தகவல் என்னை உண்மையில் வியக்க வைத்தது.  நானும் அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்காெள்ள வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டதென்பதும், இத்தகவலை எனது துணைவிக்கும் கடத்தியதாேடு நின்றிடாமல்  தற்குறிகள் யாரென்ற இந்த அரைமணிக் காணாெளியைக் காண பணித்தேன்.  மிகவும் கடினத்தாேடே  இதனைக்கண்டு முடித்தாளவளும். பள்ளிப்படிப்பைக் காட்டிலும் வாசிப்புப் பழக்கமே எனது எதிர்காலக் கனவையும், அடுத்தவர்களுடன் பேசும் கலையையும், வாழ்க்கைச் சமாளிப்பின் அணுகுமுறையையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கெடுத்ததாக உணருவதால் என் குழந்தைகளையும் வாசிப்புப்பழக்கத்தைத் தூண்ட என் துணைவியை வற்புறுத்தினேன்.  

புதன், 5 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 20 - ஐப்பசி - விசுவாவசு வியாழன் / 06 - November - 2025 - Thursday

 ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல் படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித் தொகையாகவோ அல்ல. அழகியல் ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன.

இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை  [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கிய விமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கருத்து.

https://www.jeyamohan.in/118283/ - லிருந்து...


செவ்வாய், 4 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 19 - ஐப்பசி - விசுவாவசு புதன் / 05 - November - 2025 - Wednesday

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும். 

ஒன்றுதன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்குஅதையே நான் தன்னறம் என்கிறேன்நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல்அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றனஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும். 

இரண்டுநம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள்ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம்அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டுஅவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது. 

எவரும் எந்த உறவிலும்அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாதுஎவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது. அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை. அது ஆன்மாவை அழிக்கும் செயல். எவரும் தன் அறிவார்ந்த மலர்ச்சிஆன்மிக முன்னகர்வு ஆகியவற்றை எந்நிலையிலும் விட்டுவிடக்கூடாதுபெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ, கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ.

ஆனால் அடிப்படைக் கடமைகளைச் செய்தாகவேண்டும்அதாவது, அடிப்படையானவற்றை மட்டும். அவற்றைச் செய்வது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. கடமை என்பது தார்மீகப் பொறுப்பு. எந்த பொறுப்பும் சுமை. எந்தச் சுமையும் வாழ்க்கை முழுமைக்குமானது அல்ல. எந்த பொறுப்பும் அதில் இருந்து எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வெளியேறும்பொருட்டே செய்யப்படவேண்டும்.

ஆக, மேலே சொன்ன  இரண்டு அம்சங்களின் சமரசமாகவே நம் முடிவுகள் அமையவேண்டும். ஒன்று நம் தன்னறம், இன்னொன்று, நம் சூழல்அப்படித்தான் நீங்கள் உங்கள் மணம் பற்றிய முடிவை நீங்கள் எடுக்கவேண்டும்.

- சாதிமறுப்புக்காக ஒரு திருமணம்! - 
https://www.jeyamohan.in/222560/ - லிருந்து...


செவ்வாய், 15 ஜூலை, 2025

வலைப்பதிவின் முதல்நாள் / 31 ஆனி,செவ்வாய்க்கிழமை / 15 சூலை, 2025 அன்று எழுதியது.

    வலைப்பதிவில் எழுதத் தாெடங்குங்கள் என்று இலக்கியச்சகோதரர் (இரத்தச் சகோதரனாகவே உணரத் தாேன்றுகிறது) அன்றொரு மாலையில் சொல்லிய பாெழுதே என் மூளையிலோ, தலையிலாே ஒரு ஒளி மின்னியது உண்மைதான். ஆனால் பலமுறை நினைத்தும் என்னால் எழுத இயலாமல், அந்த ஒளி குறைந்து ஒரு மாதம் கழிந்ததும் / ஏதோ ஒன்று உந்தித் தள்ளியவுடன், ஒரு வழியாக இதாே எழுதத்தாெடங்கி விட்டேன்.  ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றவுடன் இது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே.

    நேற்றைய திங்கட்கிழமை காலை வெகுநேரம் தூங்கியிருந்ததால் எழுந்ததும் மிக்க மகிழ்வுடனே எனக்குரிய நாளை துவங்கியிருந்தேன்.  ஆனாலும் என் வழக்கமான பணியான குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புதலில்லாமல், தினமும் எழுந்தவுடன் அளவளாவும் குழந்தைகளைக் காணாமல் சிறிய மனவருத்தம் காெண்டேன்.  கடந்த மூன்று வருடங்களாக வாரநாட்களில் தினமும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கி வருவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுபட நேற்றிலிருந்து அதிக நேரம் தூங்குவதென எனக்கு நானே உறுதியிட்டு காலையிலிருந்தே எனக்குரிய கடந்தவார விடுபட்ட வேலைகளை சீக்கிரமே முடித்துவிடவும், மாலையில் குறைந்தளவு அரைமணி நேரமாவது புத்தகவிழாவிற்காவது சென்று விடுவது என்றும் என்னுடைய வேலைகளை வேகமாய்ச் செய்து வந்தேன்.  நீண்ட நாட்கள் கிடப்பிலிருந்த இரு தனிப்பட்ட வேலைகளை முடித்தாலும் மாலையில் கிரிக்கெட் துவங்கியவுடன் எனக்கான வேகத்திற்குக் குறைந்தது.  நான் மட்டுமல்ல, இந்தியாவும் தான்.  

    இங்கிலாந்திற்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியில், கடைசி இரு நாட்களும் பந்தாளர்களுக்குச் சாதகமாய் மாறியிருந்த இலண்டன் ஆடுகளத்தில் 192 இலக்கைத்துரத்திப் பிடிப்பதில் மிகவும் தடுமாறியே விளையாடி வந்தார்கள்.  பயத்துடன் துவங்கிய இந்தியா, அனைத்து முக்கியமான தடுப்பாளர்களை இழந்தவுடன், 'இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்றெண்ணிய பிறகு அசாத்திய திறமையுடன் கடைசி மூன்று விக்கெட்களுடன் தாேல்வியிலிருந்து மீட்க போராடி வந்தார்கள்.  என் குணமும் ஏறக்குறைய அப்படியிருப்பதாகவே உணர்கிறேன்.  அதிகாலையிலிருந்து மெதுவாகவே வேலை செய்யும் நான், இறுதி நேரத்தில் / வேலையை முடிக்கும் தருவாயில் 20/20 முறையில் வேகமெடுத்து பின் ஒருவழியாக முடித்துவிடுவேன். சில நேரம் 10 அல்லது 20 சதவீதத்திற்கு மிச்சம் வைத்து மற்றொரு நாளிலதை முடித்துமிருக்கிறேன்.

    விழாவிற்கு செல்ல வேண்டுமென்ற திட்டமிடலால் ஏறக்குறையான வேலையை முடித்திருந்தாலும் சில வேலையை தள்ளி வைக்க நேர்ந்தது.  சாெற்பாெழிவு நிகழ்வு 60 நிமிடம் தாமதமாகத்தான் தாெடங்குமென்பதாலும், என்னுடைய அலட்சிய வேலைப்பளுவாலும் நானும் 60 நிமிட தாமதமாகத்தான் வீட்டிலிருந்து கிளம்பினேன்.  இந்தியாவும் ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்களடிக்க பாேராடிக் கொண்டிருந்தது.  அதிகக் குளிரிலும் கம்பளி அணிந்து எனது டியோ/கருப்பனுடன் விழாவிற்குச் சென்றேன்.  சொற்பொழிவு ஏற்கனவே தாெடங்கியிருந்தமையால் புத்தக அறைக்குள் செல்லாமல் சாெற்பாெழிவு மட்டுமே பாேதும் என்றெண்ணி அரங்கில் எனக்கான இடத்தைத் தேடிப்பிடித்து சொற்பாெழிவாளர் மேடை தெளிவாகத் தெரியும்படி அமர்ந்தேன்.  வாழ்த்துரை, வரவேற்புரை, விழா ஏற்பாட்டாளர்களுக்கான மரியாதை என 8:30'ற்கே சிறப்புச் சாெற்பாெழிவாளருக்கு நேரம் காெடுக்கப்பட்டது.

    மதுக்கூர் காே.இராமலிங்கம் அவர்களை முதன் முறையாக இப்பொழுதுதான் அறிகின்றேன்.  இடதுசாரி சித்தாந்தை முன்னெடுப்பதாக சிலநேரங்களில் தாேன்றினாலும் சொற்பாெழிவு நன்றாகவேயிருந்ததாக எனக்குத் தாேன்றியது (இடதுசாரி யார்? வலது சாரி யார்? என்று கூகுள் மூலம் பின்னொரு நாளில் தான் தெரிந்து காெண்டேன்.)  உருசிய எழுத்தாளர்களில் தாெடங்கி, தற்சமய கீழடி வரை அவரின் பேச்சின் தாக்கமும், வாசிப்பின் முக்கியத்துவத்தையும், 



செவ்வாய், 16 ஏப்ரல், 2024

R & D of Baby Tamil Names - Baby Boy

வெற்றிவேல் செழியன் - முதலாம் பாண்டிய மன்னர்களிலொருவர்.

தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் - மதுரை மாங்குளம் கல்வெட்டு (கி.மு. 3ஆம் நுாற்றாண்டு) - தமிழி கல்வெட்டு

பாண்டிய மன்னர்களின் பெயர்கள்:

1. முற்காலப்பாண்டியர்கள்குமரி நாடு கி.மு. 600, 2600 வருடங்களுக்கு முன்பு

  • வடிம்பலம்ப நின்ற பாண்டியன் (நெடியாேன்)பஃறுளி ஆறோடிய நாட்டிலாட்சி, கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த மன்னன்.  புறநானுாற்றுப்பாடலாதாரம்.
  • முதுக்குடும்பி பெருவழுதி (பல்யாகசாலை) ஆயிரம் வேள்விகள் நடத்தியவர், பிற்காலச்செப்பேடுகள் மற்றும் புறநானுாற்றுப்பாடலாதாரம்.
 2. கடைச்சங்க பாண்டியர்கள் - மாறன், வழுதி, செழியன் இந்த மூன்று பெயர்களால் மாறி மாறி அழைக்கப்படுவதுண்டு.  49 மன்னர்கள்.  10 மாமன்னர்கள் பற்றிய குறிப்பு, மற்றவர்களின் பெயர் தெரிந்திருந்தும் வரலாற்றுக்குறிப்புகளேதுமில்லை.
    • பாண்டியன் முடத்திருமாறன் (தென்மதுரையும், கபாடபுரமும் கடற்கோள் கொண்டுவிட்ட பிறகு, மதுரையைத் தலைநகராகக் உருவாக்கிக் காெண்டு ஆட்சி செய்த மன்னர்.  இவர் மதுரையிலாரம்பித்ததே கடைச்சங்கம்.  எட்டுத்தாெகை சங்க இலக்கியங்களான புறநானுாறு, அகநானுாறு, கலித்தாெகை, ஐங்குறுநுாறு, குறுந்தாெகை, நற்றிணை, பரிபாடல் மற்றும் பதிற்றுப்பற்று ஆகியவையரங்கேற்றப்பட்டது இவருடைய காலத்தில் தான்...)
    • பாண்டியன் மதிவாணன் (2000 வருடங்களுக்கு முன்பு நாடகத்தமிழ் நுாலியற்றிய பாண்டிய மன்னர்)
    • பாெற்கைப் பாண்டியன் (நீதி தவறாத மன்னன், (மனுநீதிச்சோழன் போல்) தெற்காசியாவின் லாவோஸ் நாட்டிலின்றும் காெண்டாடப்படும் மன்னர்)
    • கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (கடலினுள் பாேர் செய்யும் பாேது இறந்த மன்னர்)
    • பாண்டியன் அறிவுடைநம்பி (காேப்பெருஞ்சோழன் மற்றும் 
    • புலவர் பிசிராந்தையார் சம கால மன்னர்.  பிசிராந்தையாரும் இம்மன்னரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.  செந்தமிழ்ப்புலமைமிக்க இம்மன்னர் சங்கயிலக்கியங்களில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
    • ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் (பிரிவு தாங்காத இவர் மனைவி இம்மன்னர் இறந்தபோதே உடன்கட்டையேறியவர்.)
    • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - வடநாட்டாரியர்களை வென்றதினால் இப்பெயருடையவர்.  காேவலன் தவறாக குற்றம் சுமத்தப்பட்டு காெல்லப்பட்டார் என்று தெரிந்த கண்ணகி, தன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிக்க, தவறான தீர்ப்பு காெடுத்ததினால் மனம் நாெந்ததால், தானிருந்த அரியணையிலேயேயிறந்த மன்னர்.
    • சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறன் - கண்ணகி மதுரையையெரித்தும், பஞ்சம் வந்ததினாலும் காெற்கையிலிருந்து ஆட்சி புரிந்த இம்மன்னர் மதுரைக்கு வந்து முடிசூடி, கண்ணகிக்கு விழா எடுத்ததினால் பஞ்சம் நீங்கியது நாடு.  இம்மன்னர் ஓவியங்கள் காெண்ட ஒரு மாளிகையிலிறந்ததனால் இப்பெயர் பெற்றவர்.
    • தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் - தன் அப்பா நன்மாறன் இளவயதிலேயேயிறக்க இம்மன்னரும் இளவயதிலேயே அரியணையேறியவா்.  இளம்வயது மன்னரென்பதினால் சுலமாக வீழ்த்திவிடலாமென்றெண்ணியும், பாண்டிய நாட்டில் படைபலமதிகமிருப்பதினாலும் ஏழு மன்னர்கள் (சோழ மன்னர் பெருநற்கிள்ளி, சேரமன்னர் மாந்தரஞ் சேரல் இரும்பாெறை உடன் ஐந்து வேளிர் மன்னர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பாெருநன்) சேர்ந்து தலையாலங்கானம் என்றவிடத்தில் இம்மன்னர் மீது போர்.  எல்லோரையும் வீழ்த்தி புறமுதுகிட்டு ஓடச்செய்த மன்னர்.  சங்கயிலக்கியங்களான நெடுநல்வாடை மற்றும் மதுரைக்காஞ்சி, இம்மன்னரின் புகழ்பாடுகிறது.
    • கானப்பேர் கடந்த உக்கிர பெருவழுதி - சிவகங்கை பக்கத்திலிருக்கும் காளையார் கோவில் (கானப்பேர்) என்ற இடத்தை வென்றதினால் இப்பெயர் சிறப்பு.  உருத்திர சன்மர் என்ற புலவருதவியால் அகநானுாற்றுப் பாடல்களை தாெகுத்தவர் இம்மன்னர்.

             2. 1. மற்ற கடைச்சங்ககால பாண்டிய மன்னர்கள்.
      • கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
      • பன்னாடு தந்த மாறன்வழுதி
      • நல்வழுதி
      • கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி
      • இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன்
      • குறுவழுதி
      • வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
      • நம்பி நெடுஞ்செழியன்

     
    3. இடைக்காலப் பாண்டியர்கள் - WIP, will be updated soon

    4. பிற்காலப் பாண்டியர்கள் - WIP, will be updated soon

    5. தென்காசிப் பாண்டியர்கள் - WIP, will be updated soon
     
Some of the Normal & often heard names...++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Vaalarivan (வாலறிவன்) , Vaalarivu (வாலறிவு). It means higher consciousness (or) the true wisdom.

Piraisoodan - பிறைசூடன்

தமிழரசு (Thamizharasu) = Tamil king *அதிகம் கேட்டவை 
தமிழ்ச்செல்வன் (Thamizhchelvan) = affluent Tamilian *அதிகம் கேட்டவை
அன்பு (Anbu) = love, affection *அதிகம் கேட்டவை
அன்பரசு (Anbarasu) = affectionate king *அதிகம் கேட்டவை
அன்புக்கரசு (Anbukkarasu) = king of love
முத்து (Muthu) = pearl  *அதிகம் கேட்டவை
எழில் (Ezhil) = beauty  *அதிகம் கேட்டவை
தொல்காப்பியன் (Tholkaappiyan) = writer of ancient literature (This is the literal meaning of the word as well as there was a writer by the name)
கண்ணன் (Kannan), a name of Lord Krishna  *அதிகம் கேட்டவை
வேலன் (Velan) = one with the spear  *அதிகம் கேட்டவை
வெற்றி (Vettri) = victory  *அதிகம் கேட்டவை
வெற்றிவேல் (Vettrivel) = victorious spear  *அதிகம் கேட்டவை
வடிவேல் (Vadivel)  *அதிகம் கேட்டவை
வெற்றிமாறன் (Vettrimaaran)   *அதிகம் கேட்டவை
செழியன் (Chezhiyan)
நெடுஞ்செழியன் (Nedunchezhiyan)
முருகன் (Murugan), name of Lord Murugan *அதிகம் கேட்டவை
திருமுருகன் (Thirumurugan), another name of Lord Murugan *அதிகம் கேட்டவை
மணிமாறன் (Manimaran) *அதிகம் கேட்டவை
கதிர் (Kadhir) = sun *அதிகம் கேட்டவை
கதிரவன் (Kadhiravan) = sun *அதிகம் கேட்டவை
இளங்கோ (Ilango) = young king *அதிகம் கேட்டவை
பரிதி (Parithi) *அதிகம் கேட்டவை
இளம்பரிதி (Ilamparithi) 
மாயோன் (Maayon)
ஆராவமுதன் (Aaravamuthan)
அகிலன் (Agilan)
முகிலன் (Mugilan) *அதிகம் கேட்டவை
திருமலை (Thirumalai) = holy hill / the revered hill *அதிகம் கேட்டவை
திருநாவுக்கரசு (Thirunaavukkarasu) = king of the revered tongue/language *அதிகம் கேட்டவை
ஆதவன் (Aadhavan) *அதிகம் கேட்டவை
அஞ்ஜான் (Anjaan) = the fearless *அதிகம் கேட்டவை
வேந்தன் (Vendhan) = the sovereign
மைந்தன் (Mainthan)
புவியரசு (Puviyarasu)
புதல்வன் (Pudhalvan) *அதிகம் கேட்டவை
வேட்டையன் (Vettaiyan) = the hunter *அதிகம் கேட்டவை
கந்தன் (Kandhan), another name of Lord Murugan
பார்த்திபன் (Parthiban); credits to Murali Vasudevan *அதிகம் கேட்டவை
மார்க்கண்டேயன் (Markandeyan) 
அழகு (Azhagu) = beauty
அழகுராஜா (Azhaguraja) = beautiful king *அதிகம் கேட்டவை

Edit: Added some meanings and the following names.

பாம்பன் (Paamban) *அதிகம் கேட்டவை
கமபன் (Kamban), a Tamil poet
காவலன் (Kaavalan) = guardian *அதிகம் கேட்டவை
ஆறுமுகம் (Aarumugam) = the six-faced
அறிவு (Arivu) = knowledge *அதிகம் கேட்டவை
அறிவுடையன் (ArivuDaiyan), the knowledgeable
சிலம்பரசன் (Silambarasan) = king of stick-fighting *அதிகம் கேட்டவை
ஆளவந்தான் (AaLavanthaan) = came to rule / born to rule *அதிகம் கேட்டவை
பல்லவன் (Pallavan), refers to the Pallava dynasty and kings
வல்லவன் (Vallavan) = the able
கோவலன் (Kovalan), central character in the ancient Tamil epic Silappathikaram
வீரபாண்டி (Veerapaandi) *அதிகம் கேட்டவை
பூவரசன் (Poovarasan) = king of flowers
மெய்யப்பன் (Meyyappan)
மெய்ஞானி (Meynyaani) = the true wise *அதிகம் கேட்டவை

+++++++++++++++++++++++++++++++++++++++++++++


ஆதன்

யாழ் இனியன்

அதியன்

பூங்குன்றன்

அருள்மொழிவர்மன்

இன்பத்தமிழ்

அன்புச்செல்வன்

சூரியவர்மன்

இன்புகழ்

வான்புகழன்

யாழ்நிலவன்

புகழ் நிலவன்

சிவ புகழோன்

நீழ் பகழோன்

பாரிவேந்தன்

புகழின்பன்

தமிழியன்

சிவ சேரமான்

சிவ செயலோன்

ஆதன்

அதியன்

யாழ் இனியன்

புகழன்

மகிழன்

நித்திலன்

இன்பா


+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இளஞ்செழியன்
கார் முகிலன்
செய்யோன்
பாாி வேந்தன்
கனியன் பூங்குன்றன்
வில்லாளன்
சேந்தன்
சேந்தன் அமுதன்
இளந்திரையன்
அறிவன்
எழிலன்
எயிலன்
பதுமனார்
திசன்
பரிமேலழகர்

அதிகன் – Athikan – Sangam Tamil Name
அதியன் – Athiyan – Sangam Tamil name
அதியமான் – Athiyaman
அந்துவன் – Anthuvan
அமர் – Amar – the word means tranquil, desire, strife
அமல் – Amal – means செழிப்பு, fullness (occurs many times in Sangam poems)
அருமன் – Aruman – A benefactor who lived in the Sangam Age
அருள் – Arul
அருள்மொழி – Arulmozhi
அவியன் – Aviyan, name of a small region king
அழகன் – Azhakan
அழிசி – Azhisi
அன்பன் – Anpan
அன்பு – Anbu
ஆதன் – Athan (name for Chera kings, occurs in Ainkurunuru)
இனியன் – Iniyan
இருங்கோ – Irungo
இளஞ்சென்னி – Ilanchenni
இளன் – Ilan (young, youth)
இளங்கீரன் – Ilankeeran
இளங்கோ – Ilango
இளங்கோவன் – Ilangovan
இளம்பிறை – Ilampirai
இளம்வழுதி – Ilamvazhuthi
இளமாறன் – Ilamaran
உசிதன் – Usithan (name for king Pandiyan Nedumaran – உசி means கூர்மை, sharp, smart)
உதியன் – Uthiyan (name of a king)
எவ்வி – Evvi, A small region king who was very charitable
ஓரி – Ori
கடலன் – Kadalan (Kadalanār is the name of a Sangam poet)
கதிரவன் – Kathiravan
கதிர் – Kathir
கதிர்ச்செல்வன் – Kathirselvan
கபிலன் – Kapilan
கந்தன் – Kanthan
கயிலன் – Kayilan – comes from the word கயில், which means perfection – occurs only twice in Sangam literature. Ainkurunuru 62, and Paripadal 12
கலின் – Kalin – comes from கலி which means flourishing
கவின் – Kavin
கனி – Kani
காரி – Kari
கிள்ளிவளவன் – Killivalavan
கீரன் – Keeran
கோடன் – Kodan
கோமான் – Koman
சாரல் – Saaral
சால் – Saal (நிறைவு)
சால்பு – Salbu (wisdom)
சாலன் – Saalan (comes from the word சால் which means நிறைவு)
செங்குட்டுவன் – Semguttuvan
சேந்தன் – Senthan (son of Azhisi, a small region king)
சென்னி – Senni
செந்தில் – Senthil
செம்பியன் – Chempiyan
செம்மல் – Chemmal – பண்பு, culture, தலைமை, leadership
செழியன் – Chezhian
செல்வன் – Selvan
சேந்தன் – Chenthan
சேரன் – Cheran
சேரமான் – Cheraman
சோழன் – Chozhan
கோமான் – Koman
தமிழன் – Thamizhan
தமிழ்செல்வன் – Tamilselvan
தித்தன் – Thithan
திரையன் – Thiraiyan
தென்னன் – Thennan (meaning தென்னவன், which is used in Sangam poetry while referring Pandiyan kings)
நன்னன் – Nannan (small region king)
பேகன் – Pehan
நக்கீரன் – Nakeeran
நவிர் – Navir – top, peak
நவின் – Navin – to learn, to desire
நளின் – Nalin – comes from the நளி which means close, abundance, pride
நள்ளி- Nalli – A small region king
நன்னன் – Nannan – A small region king
நவில் – Navil – to desire, be abundant, to sound, to learn
நிகரன் – Nikaran – comes from the word நிகர் which means ஒளி, சிறப்பு, resemble, fame, etc.
நிமிரன் – Nimiran
நிவன் – Nivan (உயர்ந்த)
நெதி – Nethi – Wealth (rare word, Natrinai 16)
பகலோன் – Pakalon. கதிரவன், sun – this is a precious word used only once in the entire Sangam literature -in Akananuru 201
பதுமன் – Pathuman (Two poets who wrote in Kurunthokai have this name)
பண்ணன் – Pannan – A small region king
பாண்டியன் – Pandiyan
பாணன் – Panan – bard, also name of a small region king
பரணன் – Paranan
பருதி – Paruthi, கதிரவன், sun
பாரி – Pari
பிட்டன் – Pittan – A small region king
புகழ் – Pukazh
புகழன் – Pukazhan
பெருங்கோ – Perunko
போத்தன் – Pothan (Sangam poet Pothanār)
மகிழ்நன் – Makizhnan (Happy person)
மதன் – Mathan – means வலிமை, strength
மதியன் – Mathiyan
மணி – Mani
மன்னன் – Mannan
மள்ளன் – Mallan
மாறன் – Maran
முரளி – Murali – it is a ancient Tamil word which went into Sanskrit
மூரியன் – Mooriyan, comes from மூரி – Pride, strength
நந்தன் – Nandan
நன்னன் – Nannan
நம்பி – Nampi
நவிரன் – Naviran, from the root word நவிர் which means top
நவிர் – Navir, means top
நலங்கிள்ளி – Nalankilli
நவில் – Navil means declare, utter, sing
நவிலன் – Navilan
நிகரன் – Nikaran – comes from the word நிகர் which means ஒளி (Kurunthokai 311)
நெடுஞ்செழியன் – Nedunchezhian
நெடுமாறன் – Nedumaran
மகிழ்நன் – Makizhnan
மாயோன் – Mayon
முகில் – Mukil
முகிலன் – Mukilan
முருகன் – Murukan
மூவன் – Moovan
வல்லவன் – Vallavan
வழுதி – Vazhuthi
வளர்பிறை – Valarpirai
வளவன் – Valavan
வள்ளுவன் – Valluvan
வாணன் – Vanan
வியன் – Viyan (பெரிய)
வீயன் – Veeyan (செல்வன்)
வினயன் – Vinayan (from வினை meaning work)
வேந்தன் – Venthan



+++++++++++++++++++++++++++++++++++++++++++++

தீரன்
பாெற்கோ
அகத்தியன்
பெருவளத்தான்
நிலன்
நிலவன்
கதிராேன்
அகர முதலன்
கரிகாலன்
சமரன் / The word, SAMARAN, is of Tamil origin and it means, ‘a warrior’. The etymology of this word is - am > sam> samar. The Tamil verb root ‘ am’ means to match and it then gives birth to the derivatives, amai, samai. A battle, according to ancient war ethics, should be between two equals - that is, the warring parties should match each other in valour and logistics. The term ‘sam’ becomes saman, samam, etc. meaning equality. The soldier who participates in a battle or war, is, therefore, a SAMARAN - the last syllable an, in the term, is a Tamil masculine gender suffix. The original verb-root, am, ( to match, to equal ) also becomes amar > amaran and gives the same meaning of a soldier, a warrior.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
----------------------------------------------------------------------------

சங்கப் புலவர்கள் – தமிழ் புலவர்கள் பெயர்கள் – Tamil Pulavargal List

1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
----------------------------------------------------------------------------

////////////////////////////////////
பூபாலன்
பூவெழிலன்
பூமலரான்
பூங்கவினன்
நதுனன்
நகுலன்
நத்தீபன்
நந்தா
நயபாலன்
நளன்

////////////////////////////////////
அ வரிசையில் உள்ள ஆண் பெயர்கள் 
அமுதவாணன்
அமுதமொழி
அமுதமகன்
அமுதநிலவன்
அமுதநாயகன்
அமுதநம்பி
அமிழ்தநேயன்
அமிழ்து
அதியமான்
அதிநுட்பன்
அணிநிழலன்
அடற்றகையன்
அடலெழிலன்
அங்கயற்கண்ணன்
அகவெழிலன்
அகந்தூய்மையன்
அகத்தூய்மையன்
அகத்தினியன்
அகரமுதல்வன்
அருள்மொய்ம்பன்
அருள்மகன்
அருள்நிலவன்
அருள்நம்பி
அருள்மணி
அருவினையான்
அருவித்தமிழன்
அருவிச்செல்வன்
அருமறையன்
அரும்பன்
அருந்தேனவன்
அருந்தமிழன்
அருண்மொழி
அருட்தேன்மகன்
அருட்செல்வன்
அருட்சுடர்
அருட்கையன்
அருட்குயிலன்
அருட்கண்ணன்
அருஞ்சுடர்
அருங்குயிலன்
அருங்குன்றன்
அருங்குணக்குன்றன்
அருங்கலையரசன்
அரிமாத்தமிழன்
அழகுமகன்
அறநம்பி
அழகுநிலவன்
அறிவுக்கதிர்
அறிவுக்கரசன்
அழகியநம்பி
அறநெறியன்
அறவினையான்
அறனறிந்தான்
அளவறிந்தான்
அழகுநிலவன்
அறவினையான்
அறனறிந்தான்
//////////////////////////////////////////

*****************************************
ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஆசைமதியன்
ஆசைக்கதிரவன்
ஆசைக்குயிலன்
ஆசைத்தமிழன்
ஆசையமுதன்
ஆடல்மதியன்
ஆடல்நாயகன்
ஆடல்நிலவன்
ஆடல்தென்றல்
ஆடலரசன்
ஆடலமுதன்
ஆடலழகன்
ஆட்லெழிலன்
ஆடற்கண்ணன்
ஆடற்கலையரசன்
ஆற்றலினியன்
ஆற்றல்வாணன்
ஆற்றல்நாயகன்
ஆற்றலொளி
ஆற்றலெழிலன்
ஆற்றலழகன்
ஆற்றல்குன்றன்
ஆற்றலரசு
ஆற்றல்செல்வன்
ஆற்றல்குமரன்
ஆற்றல்அறிவு
ஆழியரசன்
ஆழித்தமிழன்
ஆழிக்கதிர்
ஆளுந்தமிழன்
ஆளவந்தான்
ஆவற்செல்வன்
ஆவலரசன்
ஆவல்நம்பி
ஆராவமுதன்
ஆர்வலன்
ஆதிரையன்
ஆதியெழிலன்
ஆதியனியன்
ஆதியறிவன்
ஆதியன்பன்
ஆதியருட்செல்வன்
*****************************************
++++++++++++++++++++++++++++++++++++
இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
இசைக்கண்ணன்
இசைக்கதிரவன்
இசைக்கலையரசன்
இசைக்கினியன்
இசைக்குமரன்
இசைக்குயிலன்
இசைக்குன்றன்
இசைச்செல்வன்
இசைத்தமிழன்
இசைத்தேன்மகன்
இசைநம்பி
இசைநிலவன்
இசைநெறியான்
இசைநேயன்
இடனறிந்தான்

++++++++++++++++++++++++++++++++++++
.................................................................................
ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஈகவரசன்
ஈகையன்
ஈகைச்செல்வன்
ஈகைத்தென்றல்
ஈகைநிலவன்
ஈகையரசன்
ஈதலரசன்
ஈழஅன்பன்
ஈழஅரிமா
ஈழஅரசன்
ஈழஇனியன்
ஈழஓவியன்
ஈழகுடிமகன்
ஈழக்குமரின்
ஈழக்குயிலன்
ஈழச்சுடர்
ஈழச்செல்வன்
ஈழத்தம்பி
ஈழத்தமிழன்
.................................................................................






வெண்முரசு (புதினம்) - புதினப்பெயர்கள்.

முதல் நாவலான முதற்கனல், மொத்த கதையோட்டத்திற்கான ஒரு முன்வரைவை அளித்து தொடங்குகிறது. ஆஸ்திகன் என்ற முனிமைந்தன் தன் அன்னையிடம் கதை கேட்பதாக தொடங்கும் நாவல், ஜனமேஜயனின் வேள்வியை இடைமறித்து வியாசரை வரவழைத்து தீர்வு கேட்பதிலிருந்து மைய கதையோட்டத்தை வந்தடைகிறது. வியாசர் தன் ‘ஜய’ எனும் காப்பியத்தை அவையில் அரங்கேற்றுகிறார். அஸ்தினபுரியின், குரு வம்சத்தின் கதையாக வளரும் இன்னொரு கதைச்சரடு, பீஷ்மரை வெல்லமுடியாத அம்பையின் அனல் சிகண்டியாக உருமாறி பீஷ்மரிடமே இறுதியில் வரும் இடத்தில் முடிகிறது.

மழைப்பாடல், அம்பிகை அம்பாலிகை சத்யவதி ஆகியோரின் கதாப்பாத்திரச் சித்தரிப்பை விரிவாக நிகழ்த்திச் செல்லும் இப்பெருநாவல், அவர் மைந்தரான திருதராஷ்டிரன் பாண்டு ஆகியோரின் இளமை பருவங்களையும் அவர்களின் சுயம்வரங்களையும் விரிவான பண்பாட்டு வரலாற்று சித்தரிப்புடன் வரைகிறது. பாண்டவர் பிறப்பிற்கு பின் இறுதியில் விளக்கமுடியாத கவித்துவச் சித்தரிப்புடன் முடியும் இந்நாவல், மகாபாரதத்தை, ஆடி தொடங்குபவர்களான குந்தி, சகுனி, விதுரர் ஆகியோரின் விழைவுகளையும் நெய்தெடுப்பது.

வண்ணக்கடல், சங்க பாணனாகிய இளநாகன் பாரத நிலத்தில் ஒரு முனையில் தொடங்கி மறுமுனை வரும்வரை, குரு வம்சத்தின் கதைகளை கேட்டு அறிந்து வருவதாய் உள்ளது ஒரு சரடென்றால் பிறிதொன்று பாண்டவகௌரவர்களின் இளமையை தொட்டுசெல்வது. துரோணர், பரசுராமர், ஏகலைவன், துரியோதனன் போன்ற கதாப்பாத்திரங்கள் எழுந்து வருவதோடு கர்ணனின் ஒளிமிக்க சித்திரத்தையும் இந்நாவல் காட்டுகிறது. குலக்கதைகள், நிலச்சித்தரிப்புகள், திருவிழாக்கள், இந்திய ஞான மரபுகள் என இதன் வண்ணங்கள் முடிவிலாதவை.

நீலம், தனியொரு கவித்துவமும் பித்தும் கலக்கும் மொழியில் கண்ணனின் பிறப்பையும் கல்விக்கு முந்தைய இளமை வாழ்வையும் சொல்லும் தனி நாவல். ராதையில் பிரேமையாகவும் கம்சனில் பகையாகவும் கண்ணன் வெளிப்படுகிறான். வெண்முரசு வரிசையில் இதுவே பக்க அளவில் சிறியது.

பிரயாகை, திரௌபதியின் பிறப்பு வளர்ச்சி சுயம்வரத்தையும் சித்தரிக்கும் இந்நாவலின் ஒரு சரடு, ஒருங்கே கிருஷ்ணனின் அரசியல் தொடக்கத்தையும் முதற்போரையும் துவாரகை அமையும் விதத்தையும் கூறிச் செல்கிறது.

வெண்முகில் நகரம், இந்திரபிரஸ்தம் அமைந்த வழிகளை தொடர்ந்து செல்லும் கதை. திரௌபதியின் திருமணத்திற்கு பின் பாண்டவர்கள் தங்களுக்கென அமைக்க விரும்பும் ஒரு நகரத்தின் வழியே அவர்களின் உள ஆழங்களை சித்தரிக்கிறது இந்நாவல். பூரிசிரவஸ் , சாத்யகி ஆகியோர் இதன் மையக்கதபாத்திரங்கள். அரசியலும் அதற்கு அப்பால் மனிதர்களும் என செல்லும் கதை.

இந்திரநீலம், துவாரகை அமைந்த பிறகு, கிருஷ்ணனுக்கு தன் எட்டு மனைவியருடன் அமைந்த காதலை சொல்லும் கதை. இந்திரநீலம் என்பது சியமந்தக மணி எனும் அருமணி.அது கதை மாந்தர்களிடையே உண்டாக்கும் மாற்றத்தையும் அதற்கேற்ப ஒவ்வொருவரும் மாறும் சித்தரிப்பையும் இந்நாவல் வழங்குகிறது. அனைத்திற்கும் மையமாக இருப்பது கிருஷ்ணன். அரசியல் உதவி கேட்டுவரும் திருஷ்டதுய்மனின் பார்வையில் கதை செல்கிறது.

எட்டாவது நூலாகிய காண்டீபம், இந்திரபிரஸ்தத்திலிருந்து அர்ஜுனன் கிளம்பிச் செல்லும் பயணம். அந்த பயணத்தினூடே பிற மனைவியரையும் உறவுகளையும் கண்டடைகிறான். கிருஷ்ணனின் உறவாக அறிமுகமாகும் அரிஷ்டநேமியின் குணச்சித்திரம், அர்ஜுனின் சாகசங்கள், சுபத்திரையின் வரவு என விரிவடைகிறது.

வெய்யோன், கர்ணனின் இளமை நினைவுகள், உறவுகள், இந்திரபிரஸ்தம் அமைந்த பிறகான மனது என செல்கிறது. கதை தொடங்கும்போதே துரியோதனனால் நாடளிக்கப்பட்ட சூதர் பாடும் அங்க தேசத்து மன்னனாகத்தான் இருக்கிறான். அவன் அன்னையுடனான உறவின் ஆழங்களும், காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் அழித்து இந்திரபிரஸ்தம் அமைந்த விதமும், ஜராசந்தன் போன்ற பிற அரசர்களும் அறிமுகமகுவது போன்ற கலவையான மொழிபுகளும் ஓட்டமும் அமைந்த கதை.

பத்தாம் நாவலான பன்னிரு படைக்களம், நகர் அமைந்து பாண்டவர் ராஜசூயம் வேட்டு செய்யும் வேள்வியும், அதன் காரணமாக எதிராக அமையும் அரசியல் காரணங்களும், திரௌபதி பாண்டவரின் அஸ்தினபுரியின் வருகையும் நாற்கள ஆடலும் சித்தரிக்கப்படுகிறது. ஜராசந்தன் சிசுபாலன் ஆகியோரின் கொலைக்குப் பிறகு உக்கிரமாக உருமாறும் துரியோதனின் சித்திரத்தையும் அளிக்கிறது. இதுவரையிலான மொத்த கதையோட்டதிற்கும் ஒரு திருப்பம் போல அமைந்த நாவல்.

பதினோராம் நாவலான சொல்வளர்காடு, நாடிழந்து வனவாசம் செல்லும் பாண்டவரின் கதையின் தொடக்கத்தை கூறுகிறது. ஒவ்வொரு வேதகால கல்விநிலைகள் வழியாக அதன் தத்துவங்களை கடந்து செல்லும் ஒரு பயணமாக அமையும் நாவல். கிருஷ்ணனின் குணசித்திரத்தின் முதல் மாறுதலையும், முதன்மையாக யுதிஷ்டிரன் அடையும் உச்சத்தையும் சொல்லும் நாவல்.

கிராதம், பன்னிரண்டாவது நாவல் இவ்வரிசையில். மீண்டும் கிளம்பிச் செல்லும் அர்ஜுனின் வேறொரு பயணம். இருண்மையும், ஆன்மீகமும், கலந்த சைவப் பின்னணியில் அமைந்த நாவல். இதுவரை வந்த வெண்முரசு வரிசையிலேயே மிகுபுனைவு அதிகம் கலந்தது. நான்கு திசைதேவர்களையும் வென்று அஸ்திரங்கள் பெற்று, இறுதியில் சிவனிடம் போரிட்டு பாசுபதம் பெற்ற கதையைச் சொல்கிறது. கிருஷ்ணனின் இருண்ட பக்கங்களை சித்தரிக்கும் சரடு குறிப்பிடத்தக்கது.

நூல் பதிமூன்று, மாமலர், பீமன் கல்யாண சௌகந்திக மலரை தேடிச் செல்லும் பயணம் பற்றியது. குலாந்தகனாகிய பீமனுக்கு குருகுலத்தின் மூதன்னையரின் கதைகள் சொல்லப்படுகின்றன. பாரதநிலத்தின் முதல் பேரரசியான தேவயானியின் வாழ்வு திரௌபதியின் வாழ்விற்கு இணை வைக்கப்படுகிறது. அனைத்து மெய்மைகளையும் கைவிட்டும் காதலின் அழியா மலராகிய கல்யாண சௌந்திகத்தை அடைந்ததன் மூலம் பீமன் முழுமையடைந்த நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது..

நூல் பதினான்கு, நீர்க்கோலம் பாண்டவர்களின் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையை பற்றியது. விராட நாட்டில் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து தங்களை ஒளித்துக் கொள்கிறார்கள். இதோடு நள தமயந்தி கதையும் மிக விரிவாக இதற்கு இணையாக கூறப்படுகிறது. தங்கள் ஆழ்மன பிம்பத்தையே மாற்றுருவாக அடைகிறார்கள்.

நூல் பதினைந்து எழுதழல் கெளரவ பாண்டவ மைந்தர்கள் பற்றியது இந்நூல். போருக்கு முந்தைய அணிசேரல் அணிமாறல் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கியது. அடுத்த தலைமுறை மைந்தரைப் பற்றிய சித்திரம் மிக விரிவாக இடம்பெறுகிறது.

நூல் பதினாறு குருதிச்சாரல் இளைய யாதவர் பாண்டவர்களுக்காக போருக்கு முன் தூது போவது இதில் இடம் பெறுகிறது. மூன்று முறை பாண்டவர் சார்பாக தூது போகிறார் . அது தவிர குந்தியால் அபிமன்யுவும் இளைய யாதவரால் சாத்யகியும் துரியனால் அஸ்வத்தாமனும் தூது அனுப்பப்டுகிறார்கள் வெவ்வேறு இடங்களுக்கு. போருக்கு முன்பாக அன்னையரின் உள நிலையை பேசும் நூல் இது.

பதினேழாவது நாவல் இமைக்கணம், அர்ஜுனனுக்கு கீதை உரைக்கப்பட்ட கதையைக் கூறுகிறது. மொத்த மஹாபாரதத்தையும் வேதங்களுக்கு இடையிலான மோதலாகச் சித்தரிக்கும் வெண்முரசு, எழப்போகும் புதிய வேதத்தை இளைய யாதவருக்கும் வெண்முரசின் முக்கிய கதைமாந்தர்களுக்குமான விவாதம் மூலம் விளக்குகிறது.

பதினெட்டாவது நாவலான செந்நாவேங்கை, அன்னைப் புலியென குருஷேத்ரம் காத்திருந்ததைச் சித்தரிக்கிறது. இளைய யாதவரின் தூது முறிந்தபின் இருதரப்பும் போருக்கெழுவதையும் இளமைந்தரின் போருக்கான மனநிலையையும் அவர்களின் மணங்களையும் விவரிக்கும் இந்நாவல், அன்னையரின் அச்சத்திற்கேற்ப முதல்நாள் போரிலேயே மைந்தர்கள் களம்படுவதுடன் முடிகிறது.

பத்தொன்பதாம் நாவலான திசைதேர் வெள்ளம், இரண்டாம்நாள் முதல் பத்தாம்நாள் வரையிலான போரினை விவரிக்கிறது. பீஷ்மரைக் காக்க கங்கையின் ஆணைப்படி அவருடலில் எழும் எட்டுவசுக்களும் ஒவ்வொருவராக அவரைவிட்டு நீங்க, பத்தாம்நாள் போரில் தனித்து நிற்கும் பீஷ்மர் சிகண்டியாலும் அர்ஜுனனாலும் களத்தில் வீழ்வதைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

இருபதாம் நாவலான கார்கடல், பீஷ்மரின் வீழ்ச்சிக்குப்பின் கர்ணன் களம்புகுவதையும், அபிமன்யு, கடோத்கஜன் மற்றும் துரோணர் ஆகியோர் வீழ்வதையும் சித்தரிக்கிறது இந்நாவல்.

இருபத்து ஒன்றாம் நாவலான இருட்கனி, கர்ணன் களத்தலைமை ஏற்ற பின்னரான போரையும், தன்னிகரில்லா வீரனாக இருப்பினும் மாபெரும் கொடைகளின் காரணமாக கர்ணன் வீழ்வதையும் விவரிக்கிறது.

இருபத்து இரண்டாம் நாவலான தீயின் எடை, துரியோதனன் வீழ்வதையும், பாண்டவர்களின் வெற்றியையும், பாண்டவர்களின் மைந்தர்கள் கொல்லப்படுவதையும் உள்ளடக்கிய நாவல்.

இருபத்து மூன்றாம் நாவலான நீர்ச்சுடர், கங்கைக்கரையின் முக்தவனம் என்னுமிடத்தில் பாண்டவ மைந்தர்களுக்கும் கௌரவர்களுக்கும் நீர்க்கடன் நிகழ்வதை விவரிக்கிறது.

இருபத்து நான்காம் நாவலான களிற்றியானை நிரை போரிலிருருந்து அஸ்தினபுரி பாண்டவர்களின் ஆட்சியில் மீண்டெழுவதையும், பாண்டவர்கள் திசைப்பயணத்திற்குப் பின் அஸ்வமேதம் வேட்பதையும் கூறுகிறது.

இருபத்து ஐந்தாம் நாவலான கல்பொருசிறுநுரை துவாரகையின் வீழ்ச்சியைப் பேசுகிறது. குடிப்போர்களிலும் முடியுரிமை பூசல்களிலும் சிக்கித் தவித்த துவாரகை, இளைய யாதவர் நகர் நீங்கியபின் இயற்கை இடர்களாலும் தீரா மானுட ஆணவத்தினாலும் அழியும் சித்திரம் இந்நாவல். துவாரகையும் அதன் குடிகளும் முற்றழிந்தபின் யாதவ மூத்தோர்கள் மறைந்ததையும், ஆற்றுவது ஆற்றியிருந்த இளைய யாதவர் விண்புகுந்ததையும் இந்நாவல் விவரிக்கிறது.

இருபத்து ஆறாம் நாவலான முதலாவிண் பாண்டவர்கள் பரிஷீத்திற்கு முடிசூட்டியபின் ஆட்சிப் பொறுப்பை யுயுத்சுவிடம் ஒப்படைத்துவிட்டு விண்புகுந்ததைச் விளக்கும் நாவல். அரிய குடிக்கதை ஒன்று மானுடத்தின் ஆகச்சிறந்த காவியமாக மாறியதன் கதையையும் இந்நாவல் சித்தரிக்கிறது.


https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/kulanthai-peyargal-list/


வெள்ளி, 29 மார்ச், 2024

Tamil's Most Wanted Bookmarks

 

  1. தமிழ்ப்பேழை - தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம்
  2. வாசிப்பை நேசிப்போம் - முகப்புத்தகக்குழு.
  3. திருக்குறள் : திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
  4. சொல்வனம்: மின்னிதழ்.  (கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்)

 


சனி, 27 ஜனவரி, 2024

Today's Read & Listen: My Bookmarks of reading - நான் வாசித்தவை, கேட்டவை.

20, மார்ச்
28, மார்ச்
30, மார்ச்
  • இருபெருநிலைகள், ஜெயமோகன் பெங்களூரு கட்டண உரை 
31, மார்ச்
  1. Ajithan Speech - மைத்ரி நாவல் விமர்சன அரங்கு - பார்த்து கேட்டவை.  மலையாள எழுத்தாளரின் நூல் விளக்கம் மற்றும் அஜிதனின் நன்றியுரையின் முப்பது நிமிடங்கள்.
01, ஏப்ரல்
  1. Ajithan Speech - மைத்ரி நாவல் விமர்சன அரங்கு - பார்த்து கேட்டவை.  மலையாள எழுத்தாளரின் நூல் விளக்கம் மற்றும் அஜிதனின் நன்றியுரையின் முப்பது நிமிடங்கள்.
  2. அஜிதன் ஏற்புரை | 'மருபூமி' சிறுகதை தொகுப்பு வெளியீடு | Ajithan speech - முதல் ஏழு நிமிடங்கள்.  அஜிதனின் ஏற்புரை வரை...
02, ஏப்ரல் 
03, ஏப்ரல்