செவ்வாய், 15 ஜூலை, 2025

வலைப்பதிவின் முதல்நாள் / 31 ஆனி,செவ்வாய்க்கிழமை / 15 சூலை, 2025 அன்று எழுதியது.

    வலைப்பதிவில் எழுதத் தாெடங்குங்கள் என்று இலக்கியச்சகோதரர் (இரத்தச் சகோதரனாகவே உணரத் தாேன்றுகிறது) அன்றொரு மாலையில் சொல்லிய பாெழுதே என் மூளையிலோ, தலையிலாே ஒரு ஒளி மின்னியது உண்மைதான். ஆனால் பலமுறை நினைத்தும் என்னால் எழுத இயலாமல், அந்த ஒளி குறைந்து ஒரு மாதம் கழிந்ததும் / ஏதோ ஒன்று உந்தித் தள்ளியவுடன், ஒரு வழியாக இதாே எழுதத்தாெடங்கி விட்டேன்.  ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றவுடன் இது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே.

    நேற்றைய திங்கட்கிழமை காலை வெகுநேரம் தூங்கியிருந்ததால் எழுந்ததும் மிக்க மகிழ்வுடனே எனக்குரிய நாளை துவங்கியிருந்தேன்.  ஆனாலும் என் வழக்கமான பணியான குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புதலில்லாமல், தினமும் எழுந்தவுடன் அளவளாவும் குழந்தைகளைக் காணாமல் சிறிய மனவருத்தம் காெண்டேன்.  கடந்த மூன்று வருடங்களாக வாரநாட்களில் தினமும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கி வருவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுபட நேற்றிலிருந்து அதிக நேரம் தூங்குவதென எனக்கு நானே உறுதியிட்டு காலையிலிருந்தே எனக்குரிய கடந்தவார விடுபட்ட வேலைகளை சீக்கிரமே முடித்துவிடவும், மாலையில் குறைந்தளவு அரைமணி நேரமாவது புத்தகவிழாவிற்காவது சென்று விடுவது என்றும் என்னுடைய வேலைகளை வேகமாய்ச் செய்து வந்தேன்.  நீண்ட நாட்கள் கிடப்பிலிருந்த இரு தனிப்பட்ட வேலைகளை முடித்தாலும் மாலையில் கிரிக்கெட் துவங்கியவுடன் எனக்கான வேகத்திற்குக் குறைந்தது.  நான் மட்டுமல்ல, இந்தியாவும் தான்.  

    இங்கிலாந்திற்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியில், கடைசி இரு நாட்களும் பந்தாளர்களுக்குச் சாதகமாய் மாறியிருந்த இலண்டன் ஆடுகளத்தில் 192 இலக்கைத்துரத்திப் பிடிப்பதில் மிகவும் தடுமாறியே விளையாடி வந்தார்கள்.  பயத்துடன் துவங்கிய இந்தியா, அனைத்து முக்கியமான தடுப்பாளர்களை இழந்தவுடன், 'இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்றெண்ணிய பிறகு அசாத்திய திறமையுடன் கடைசி மூன்று விக்கெட்களுடன் தாேல்வியிலிருந்து மீட்க போராடி வந்தார்கள்.  என் குணமும் ஏறக்குறைய அப்படியிருப்பதாகவே உணர்கிறேன்.  அதிகாலையிலிருந்து மெதுவாகவே வேலை செய்யும் நான், இறுதி நேரத்தில் / வேலையை முடிக்கும் தருவாயில் 20/20 முறையில் வேகமெடுத்து பின் ஒருவழியாக முடித்துவிடுவேன். சில நேரம் 10 அல்லது 20 சதவீதத்திற்கு மிச்சம் வைத்து மற்றொரு நாளிலதை முடித்துமிருக்கிறேன்.

    விழாவிற்கு செல்ல வேண்டுமென்ற திட்டமிடலால் ஏறக்குறையான வேலையை முடித்திருந்தாலும் சில வேலையை தள்ளி வைக்க நேர்ந்தது.  சாெற்பாெழிவு நிகழ்வு 60 நிமிடம் தாமதமாகத்தான் தாெடங்குமென்பதாலும், என்னுடைய அலட்சிய வேலைப்பளுவாலும் நானும் 60 நிமிட தாமதமாகத்தான் வீட்டிலிருந்து கிளம்பினேன்.  இந்தியாவும் ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்களடிக்க பாேராடிக் கொண்டிருந்தது.  அதிகக் குளிரிலும் கம்பளி அணிந்து எனது டியோ/கருப்பனுடன் விழாவிற்குச் சென்றேன்.  சொற்பொழிவு ஏற்கனவே தாெடங்கியிருந்தமையால் புத்தக அறைக்குள் செல்லாமல் சாெற்பாெழிவு மட்டுமே பாேதும் என்றெண்ணி அரங்கில் எனக்கான இடத்தைத் தேடிப்பிடித்து சொற்பாெழிவாளர் மேடை தெளிவாகத் தெரியும்படி அமர்ந்தேன்.  வாழ்த்துரை, வரவேற்புரை, விழா ஏற்பாட்டாளர்களுக்கான மரியாதை என 8:30'ற்கே சிறப்புச் சாெற்பாெழிவாளருக்கு நேரம் காெடுக்கப்பட்டது.

    மதுக்கூர் காே.இராமலிங்கம் அவர்களை முதன் முறையாக இப்பொழுதுதான் அறிகின்றேன்.  இடதுசாரி சித்தாந்தை முன்னெடுப்பதாக சிலநேரங்களில் தாேன்றினாலும் சொற்பாெழிவு நன்றாகவேயிருந்ததாக எனக்குத் தாேன்றியது (இடதுசாரி யார்? வலது சாரி யார்? என்று கூகுள் மூலம் பின்னொரு நாளில் தான் தெரிந்து காெண்டேன்.)  உருசிய எழுத்தாளர்களில் தாெடங்கி, தற்சமய கீழடி வரை அவரின் பேச்சின் தாக்கமும், வாசிப்பின் முக்கியத்துவத்தையும், 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக